தமிழக மீனவர்களை தாக்கி வலைகளைப் பறித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கிய இலங்கை கடற்படை கயவர்கள், மீனவர்களின் வலைகளைப் பறித்துச் சென்று அட்டூழியம் செய்துள்ளனர்.
வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார்(35), பாஸ்கர்(42), ராஜ்குமார்(35) ஆகிய 3 மீனவர்களும் இதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென துப்பாக்கிகளுடன் படகில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்டு தாக்கியதாக தெரிகிறது.
மேலும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வலைகளை அறுத்து கடலில் வீசிவிட்டு மீதி உள்ள நல்ல வலைகளை எடுத்துச் சென்று விட்டனர். இலங்கை கடற்படையினரிடம் இருந்து உயிர்தப்பிய ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் நேற்று மாலை கரை திரும்பி தாங்கள் தாக்கப்பட்டது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்தனர்.












Click it and Unblock the Notifications