For Daily Alerts
Just In
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காலராவுக்கு 3 பேர் பலி
தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பண்ணைப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியும், ஒரு பெண்ணும் காலராவுக்கு நேற்று இரவு பலியானார்கள். இன்னொருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அசுத்தமடைந்த தண்ணீர் குடிநீர்க் குழாய்கள் மூலம் சப்ளை ஆனதே காலரா பரவியதற்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
காலராவால் பாதிக்கப்பட்டு 160க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 140 பேர் சின்னமனூல் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பி.சி.பட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள குடிநீர் பம்பிங் நிலையத்தில் குடிநீர் மாசுபட்டதே காலராவுக்குக் காரணம் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
Comments
Story first published: Sunday, May 16, 2010, 15:14 [IST]