போரில் மறைந்த ஈழத் தமிழர்களுக்கு புதிய தமிழகம் அஞ்சலி
நெல்லை : ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு நெல்லையில், புதிய தமிழகம் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மே 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை புதிய தமிழகம் கட்சி சார்பில் வலி சுமந்தவாரம் கடைபிடிக்கப்படுகிறது.
நெல்லையில் மாநகர கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், மாநகர இளைஞரணி செயலாளர் செல்லப்பா, பிரசார அணி செயலாளர் ஜெயபால் யாதவ், மாநர இணை செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.
பாளை ஓன்றிய செயலாளர் ராமசந்திரன், மானூர் தெற்கு ஓன்றிய செயலாளர் மகாராஜா, இளைஞரணி ரவீந்திரன், தொண்டரணி வேல்முருகன், கணேசன், மாணவரணி காளிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி இலங்கை தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications