உத்தமபாளையம்- காலராவுக்கு மேலும் ஒருவர் பலி - எண்ணிக்கை 4 ஆனது
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காலராவுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
உத்தமபாளையத்தில் அசுத்தமடைந்த குடிநீர் விநியோகம் ஆனதால் அங்கு வயிற்றுப் போக்கு பரவியுள்ளது. இதற்கு நேற்று பிற்பகல் வரை 3 பேர் பலியாகியிருந்தார்கள். நேற்று மாலை முத்துவாடன் என்பவர் உயிரிழந்தார். இதையும் சேர்த்து தற்போது பலி எண்ணிக்கை 4 ஆகியுள்ளது.
உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், எரசக்கநாயக்கனூர், ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, கோகிலாபுரம், க.புதுப்பட்டி, சின்னமனூர், போடி, தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேனி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே காலராவுக்கு பவித்ரா (10), கண்ணன் (50) மற்றும் லீலாவதி (48)ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications