சுசீந்திரத்தில் 85 வயது மூதாட்டியின் கண்கள் தானம்
சுசீந்திரம்: சுசீந்திரத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவரின் கண்கள் தானமாக பெறப்பட்டு கண் சேமிப்பு வங்கியி்ல் சேர்க்கபபட்டது.
அறிவியல் முன்னேற்றம் கண்டு வரும் இந்த காலத்தில் அன்னதானத்தை மிஞ்சி தனது உடலையே தானமாக வழங்கி பலரது வாழ்வில் ஓளியேற்ற உதவும் உடல்தானம் சிறந்ததாக கருதப்படுகிறது. ஒருவர் இறந்த பின் வழங்கும்தான் உடல்தானம் மட்டும்தான்.
அந்த வகையில் சுசீந்திரம் கொத்தையார் திட்டதெருவை சேர்ந்த செல்லப்பன் பிள்ளை என்பவர் மனைவி விஜயம்மா என்ற மூதாட்டி இறந்த பின் தன் கண்களை தானம் செய்து மக்களி்ன் மனதில் இடம் பிடித்து விட்டார். இவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கை மூலம் இவர் கண்தானத்தை பற்றி அறிந்து கொண்டு தனது கண்களை தானம் செய்வதாக உறுதி மொழி பத்திரத்தில் கையேழுத்திட்டார்.
கடந்த சில மாதங்களாக இவரது உடல் நிலை மோசமான நிலையில் இருந்த போதெல்லாம் இறந்த பின் கண்ணை தானம் செய்துவிடுமாறு தனது மகனிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவர் இறந்ததை அடுத்து நாகர்கோவிலில் உள்ள கண் மருத்துவமனைக்கு அவரது மகன்கள் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து விஜயம்மா இறந்த அரை மணி நேரத்தில் கண் டாக்டர்கள் சென்று அறுவை சிகி்ச்சை மூலம் கண்ணை தானமாக பெற்று கண் சேமிப்பு வங்கியில் சேர்த்தனர். இதன் மூலம் இருவருக்கு கண் பார்வை கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விஜயம்மா மகன் விக்ரமன் கூறும்போது, எனது தாய் கண் தானத்தின் முக்கியத்துவத்தை பத்திரிக்கை மூலமாகவும், தொலைகாட்சி மூலமாகவும் அறிந்துஉடனேயை தனது கண்களை தானம் செய்வதாக உறுதி மொழி பத்திரத்தில் கையேழுத்திட்டு ஆஸ்பத்திரியில் வழங்கினார். அவர் விருப்பம் போலவே இறந்த அரை மணி நேரத்தில் டாக்டர்கள் வந்து கண்ணை எடுத்து சென்றனர்.
சுசீந்திரம் பகுதியில் வயதான பெண்மணி கண்தானம் செய்வது இதுவே முதல் முறையாகும் என அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications