சுனந்தாவை மணக்கிறார் சசி தரூர் - ஜூன் 26ல் நிச்சயதார்த்தம்
பெங்களூர்: ஐபிஎல் கொச்சி சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த சசி தரூருக்கும், அவரது காதலி சுனந்தா புஷ்கருக்கும் ஜூன் 26ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
பெங்களூர் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இதற்காக 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அங்குள்ள அறைகள் அனைத்தும் புக் செய்யப்பட்டுள்ளதாம்.
ஜூன் 26ம் தேதி நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டு ஓணம் பண்டிகையின்போது திருமணத்தை நடத்த தரூர் தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.
இந்தத் திருமணம் இருவருக்குமே 3வது திருமணமாகும். தரூரின் முதல் மனைவி இறந்து விட்டார். 2வதாக கனடா பெண்ணை மணந்தார். சமீபத்தில் அவரை விவாகரத்து செய்து விட்டார்.
சுனந்தாவின் முதல் கணவர் இறந்து விட்டார். 2வதாக கேரளாவைச்சேர்ந்த ஒருவருடன் குடும்பம் நடத்தினார். பின்னர் அவரைப் பிரிந்து விட்டார். தற்போது 3வதாக தரூரைக் கைப்பிடிக்கிறார்.
தரூருக்கு 54 வயதாகிறது. சுனந்தாவுக்கு 42 வயதாகிறது. சுனந்தாவுக்கு 2வது கணவர் மூலம் ஒரு குழந்தையும், தரூருக்கு 2வது மனைவி மூலம் இரு குழந்தைகளும் உள்ளனர்.