சிங்கள ராணுவத்திடம் சிக்கி சிதைந்த தமிழர்கள்- அம்பலப்படுத்திய சேனல் 4
ஹிட்லர் காலத்தில் யூதர்கள் சந்தித்த பேரவலத்திற்கு சற்றும் குறையாத கொடூரத்தை ஈழத் தமிழர்கள் சந்தித்துள்ளனர். இது வெளியுலகுக்கு தெரியாமல் புதைந்து போயிருந்தாலும், மேற்கத்திய மீடியாக்களால் இது அவ்வப்போது வெளியே கொண்டு வரப்பட்டு, ஈழத்தில் நடந்து முடிந்து போன ஒரு மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை வெளியுலகம் கண்டு அதிர வைத்து வருகிறது.
லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி முன்பு, பிடிபட்ட ஈழத் தமிழ் இளைஞர்களின் கை, கால்களைக் கட்டி பின்னாலிருந்து சிங்கள காடையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பகீர் காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது மேலும் ஒரு பகீர் காட்சியை சேனல் 4 வெளியிட்டுள்ளது.
அதில் ஏராளமான தமிழர்களை ஒரு இடத்தில் கைகளை பின்புறமாக கட்டி வைத்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
15 வயதுக்கும் உட்பட்ட ஒரு சிறுவனையும் இதே போல கட்டி வைத்து சித்ரவதை செய்கின்றனர்.
இன்னொரு இடத்தில் இளம்பெண்கள் சிலர் மயங்கியபடி கிடக்கின்றனர். அவர்களை ராணுவத்தினர் சித்ரவதை செய்ததில் மயங்கி கிடப்பது போல தெரிகிறது.
இவர்கள் அனைவரையும் சித்ரவதைக்கு பிறகு சிங்கள ராணுவத்தினர் கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த காட்சிகள் அனைத்தும் ராணுவ வீரர் ஒருவர் செல்போன் மூலம் எடுத்தவை என்று சேனல் 4 கூறியுள்ளது.













Click it and Unblock the Notifications