இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்ட 40,000 குளுக்கோஸ் பாட்டில்கள்

இலங்கைக்கு மருந்து, மாத்திரைகளை சப்ளை செய்து வந்த 6 இந்திய நிறுவனங்களின் சப்ளையை அந்நாட்டு அரசு சென்ற ஆண்டு திடீரென நிறுத்தியது. தரமற்ற மருந்துகளை வழங்கியதால் சப்ளை நிறுத்தப்படுவதாகக் கூறியது.
இந்நிலையில் இந்த நிறுவனங்களிடம் இருந்து மீண்டும் மருந்துப் பொருள்களை இலங்கை அரசு பெறலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் தரமான மருந்துப் பொருள்களை வாங்குவதில் எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். ஒரு மருந்துக்கு இணையான நிவாரண சக்தியுடைய பிற மருந்தைக்கூட மாற்றாக கொள்முதல் செய்யமாட்டோம் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபாலா சிறிசேனை கூறியுள்ளார்.
இலங்கையில் கடந்த வாரம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கடும் குளுக்கோஸ் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து அந்நாட்டு விமானப் படை விமானம் மூலம் இந்தியாவில் இருந்து 40,000 குளுக்கோஸ் பாட்டில்கள் அவசரமாக இறக்குமதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications