இந்திய ஏற்றுமதி 36 சதவீதம் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், நாட்டின் ஏற்றுமதி 36.2 சதவீதம் அதிகரித்து ரூ.76,050 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பின்னடைவால் அந்த ஆண்டின் அக்டோபர் மாதத்திலிருந்து தொடர்ந்து 13 மாதங்களாக நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்து வந்தது.

சென்ற ஏப்ரல் மாதத்தில், ஏற்றுமதி 30 சதவீதம் குறைந்து ரூ.55,800 கோடியாக சரிவடைந்தது.

இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய ஊக்குவிப்பு சலுகைகளால், சென்ற 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2010-11ம் நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் ஜவுளி, நவரத்தினங்கள் மற்றும் கடல் உணவு பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் அமோக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், அந்நாட்டிலிருந்து அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளதால் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதியும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் கவரிங் நகைகள், மர கைவினைப் பொருட்கள் ஆகியவையும் அடங்கும்.

அதே போல கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+