லைலா மீண்டும் வரும் அபாயம்- மேற்கு வங்கம், ஒரிசாவில் உஷார் நிலை

லைலா புயல் பலவீனமடைந்து, ஆந்திராவின் பபட்லா பகுதியில் கரையைக் கடந்து விட்டது. ஆனால் அது மீண்டும் கடலுக்குள் நுழைந்து மேலும் பலம் பொருந்திய புயலாக வரக் கூடும் என டெல்லி இந்திய வானியல் கழகம் எச்சரித்துள்ளது.
அப்படி வரும்போது மேற்கு வங்கம், ஒரிசா அல்லது வங்கதேசத்தில் அது பெரும் பாதிப்பையும், சேதத்தையும் ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அறிவுறுத்தியுள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆறு கடலோர மாவட்டங்களில் உஷார்நிலை அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வடக்கு, தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள், கிழக்கு மிதினாப்பூர், ஹெளரா, ஹூக்ளி மாவட்டங்களில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் இன்று மாலை முதல் பலத்த கடற் காற்று வீசக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில நிதியமைச்சர் ஆசிம் தாஸ்குப்தா கூறியுள்ளார்.
இன்று காலை 7.30 மணி நிலவரப்படி, லைலா புயல் ஆந்திர மாநிலம் மசிலிப்பட்டினம் அருகே நிலை கொண்டுள்ளது.
தற்போதைய சூழல்படி, இது மேலும் பலவீனமடைந்து முதலில் வடக்கு நோக்கியும், பின்னர் வட கிழக்கில் ஒரிசாவை நோக்கியும் நகரத் தொடங்கும்.
இதன் தாக்கத்தால், வடக்கு கடலோர ஆந்திரா, தெலுங்கானாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழையும், ஆங்காங்கே மிக பலத்த மழையும், சில இடங்களில் மிக மிக பலத்த மழையும் பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 85 முதல் 95 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும்.
ஆந்திர கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்திற்கு கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடலோர மற்றும் தெற்கு ஒரிசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலான காற்று வீசக் கூடும்.
படிப்படியாக புயல் வடக்கு வங்கக் கடலில் நுழைந்து வலுவான புயலாக மாறக் கூடும் என கணிக்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி லைலா புயல், ஒரிசா மாநிலம் கோபால்பூரிலிருந்து 570 கிலோமீட்டர் தென் மேற்கில் நிலை கொண்டிருந்தது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications