கர்நாடகத்தில் தமிழக நிறுவனங்கள் ரூ.11,856 கோடி முதலீடு
இந்த ஆண்டில் தமிழக நிறுவனங்களின் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என கர்நாடக மாநில தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.
வரும் ஜூன் மாதம் 3ம் தேதி பெங்களூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய நிரானி,
கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்திற்கு வந்த மொத்த முதலீட்டில் தமிழகத்தின் ஒன்பது முன்னணி நிறுவனங்களின் பெரிய முதலீடுகளும் அடங்கும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் கர்நாடகத்தில் ரூ.11,856 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில் மேலும் 3 தமிழக நிறுவனங்கள் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய முன் வந்துள்ளன என்றார். ஆனால், அவற்றின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.
இந் நிலையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கர்நாடக மாநில அரசு மொத்தம் 72 திட்டங்களுக்கான ஒந்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா சிமிண்ட்ஸ் மற்றும் சுரானா இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் முதலீடுகளும் அடங்கும்.
இந்தியா சிமிண்ட்ஸ் கர்நாடகத்தில் ரூ.850 கோடி முதலீட்டில் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சுரானா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.4,000 கோடி முதலீட்டில் உருக்கு ஆலையை அமைக்கவுள்ளது.