மகனை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் தாக்கி பலி
Subscribe to Oneindia Tamil
உடன்குடி மணப்பாட்டில் மகனை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் தாக்கி இறந்தார்.
குலசேகரபட்டிணம் அருகே உள்ள மணப்பாட்டை சேர்ந்தவர் அமலன். மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு தோமஸ், கோவாஸ், ராஜூ ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
அமலன் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று காலை 6 மணியளவில் முதலில் கண்விழித்த ராஜூ வீட்டை விட்டு வெளியே வந்தான். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டான். அவன் மீது மின்சாரம் தாக்கியதால் அலறினான்.
அவனது அலறல் சத்தம் கேட்டு தாய் ராணி ஓடிவந்து மகனை காப்பாற்ற முயன்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் காயமடைந்த தாய், மகன் இருவரையும் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராணி இறந்து விட்டார். ராஜூக்கு சிகி்ச்சை அளிக்கப்படுகிறது.











Click it and Unblock the Notifications