இயற்கையை அழிப்பது தற்கொலைக்கு சமம் - குன்றக்குடி அடிகளார்

தமிழக அறிவியல் பேரவையின் 10வது கருத்தரங்க துவக்கவிழா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடந்தது. துணைவேந்தர் சபாபதி மோகன் தலைமை வகித்தார்.
கருத்தரங்க ஆய்வுக்கட்டுரையை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட்டு பேசியதாவது:
இயற்கைதான் அறிவியல். அறிவியல் தமிழ் அவசியமாகிறது. காரைக்குடியில் தொடங்கிய தமிழ் அறிவியல் பேரவை இன்று நெல்லை வந்திருக்கிறது. அறிவியலும், ஆன்மீகமும் ஆக்க பாதையில் பயணித்தால் சாதிக்க முடியாதவை இல்லை.
இயற்கையை தழுவிய வாழ்க்கையில் இருந்து நாம் விலகி விட்டோம். இயற்கையை நாம் அழிப்பது மனிதன் தனக்கு தானே தற்கொலை செய்வதற்கு சமமாகும். பூமிபந்து வெப்பமடைய கூடாது என்றார்.
கருத்தரங்கில வேளாண்மை துறை இணை செயலாளர் வாசுகி பேசுகையில் பூமி வெப்பமயமாதல் குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டபோதிலு்ம், உலக நாடுகளிடம் ஓருமித்த கருத்து உருவாகவில்லை. சில நாடுகள் புவி வெப்பமாகவில்லை என்றும், பல நாடுகள் இதை நம்பவில்லை என்றும் கூறுகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் பனி அதிகமாக உள்ளது. தென் பகுதியில் வறட்சி, வெப்பம் அதிகமாக இருக்கிறது. கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் மிகுந்த மாற்றங்கள். அதை தொடர்ந்து 50 ஆண்டுகளில் பல்கி பெருகி விட்டன. மறு சுழற்சி செய்யப்படாத பாலீதின் பைகள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை கட்டுபடுத்த பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications