தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சையத் முனீர் ஹோடா நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சையத் முனீர் ஹோடா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பணிபுரிந்த டி.சந்திரசேகரனின் பதவிக்காலம் கடந்த 21-ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

தற்போது சையது முனீர்ஹோடா தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்து கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா ஆணையிட்டுள்ளார்.

சையது முனீர்ஹோடா மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் நாள் முதல், 2 ஆண்டு காலத்திற்கு இப்பதவியில் பணிபுரிவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஹோடா, கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் உள்துறைச் செயலாளராக பணியாற்றியவர். தற்போது மின்விசை நிதிக் கழக தலைவர் மற்றும்நிர்வாக இயக்குநராக உள்ளார்.

1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹோடா, தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது போன்ற பல மொழிகளை பேசும் சிறந்த புலமை மிக்கவர்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், பி.சி.அலெக்சாண்டர், பீஷ்மநாராயண சிங் ஆகியோர் கவர்னராக இருந்த போது அவர்களது செயலாளர், தமிழக அரசில் மக்கள் நல்வாழ்வு துறை, உள்துறை, போக்குவரத்து துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆகிய துறைகளின் செயலாளர் பொறுப்பு உள்பட பல முக்கிய பதவிகளை வகித்தவர்.

முதல்வராக 5வது முறையாக கருணாநிதி பொறுப்பேற்ற பின்னர் இவர் முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+