பெண்ணை கடத்தி ஆபாச படம்-ஆட்டோ டிரைவர் பிடிபட்டான்
சென்னை: சென்னையில் பெண்களை கடத்தி ஆபாசப் படம் எடுத்து வந்த கும்பலைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகரில் ஒரு கும்பல் இளம் பெண்களை ஏமாற்றி, கடத்தி வந்து ஆபாச படம் எடுப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து செம்பியம் இன்ஸ்பெக்டர் ரவிகுமரன் திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது போலீசைப் பார்த்ததும் 4 பேர் தப்பி ஓடினர்.
வீட்டுக்குள் இருந்த இளம் பெண்ணை போலீசார் மீட்டனர். அவரை கடத்தி வர உதவிய ஆட்டோ டிரைவர் முரளி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் இந்தக் கும்பல் இதுபோல் பல பெண்களை கடத்தி வந்து ஆபாச படம் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இந்தப் படங்களை இன்டர்நெட்டிலும் சிடிக்களாகப் போட்டும் விற்று வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் 9ம் வகுப்பு மாணவி ஆவார். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications