முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.18,000 கோடி லாபம்
மும்பை: அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட சமரசத்தால் பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை பெரிதும் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ரூ 18000 கோடி லாபம் கிடைத்துள்ளது.
திங்கள்கிழமை ஒரே நாளில் கிடைத்த லாபம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாண்டுகளுக்கு முன் பிரிந்து சகோதரர்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானிகளை, எரிவாயு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சேர்த்து வைத்துள்ளது.
உச்சநீதி மன்றத் தீர்ப்பால் வெகுவாக சரிந்து போன அனில் அம்பானி நிறுவனப் பங்குகள் அனைத்துமே நேற்று ஏற்றம் பெற்றன. குறிப்பாக ரிலையன்ஸ் நேச்சுரல் ரிஸோர்ஸ் நிறுவனப் பங்குகள் விலை 23
இதனால் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு கணிசமான லாபம் கிடைத்தது.
நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தின் முடிவில் ரூ 18000 கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் லாபம் பெற்றனர்.
முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனப் பங்குகளும் நல்ல லாபத்தில் கைமாறின.












Click it and Unblock the Notifications