முல்லைத் தீவு பகுதிக்கு தமிழர்கள் செல்லத் தடை!
கொழும்பு: வடக்கு இலங்கையின் முல்லைத் தீவு பகுதிக்குச் செல்ல பொது மக்களுக்கு (தமிழர்களுக்கு) அனுமதி வழங்கப்படவில்லை என லங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார்.
முல்லைத் தீவில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அப்படி யாரேனும் செல்ல விரும்பினால் பாதுகாப்பு அமைச்சகத்தில் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முல்லைத் தீவு பகுதிக்கு சமீபத்தில் சென்று வந்த இலங்கை எம்பி, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான தமிழர் விளை நிலங்கள் சிங்களப் படையினரின் கேம்ப்களாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது நினைவிருக்கலாம்.
மேலும் இந்தப் பகுதியில் பொதுமக்கள் தங்கள் நகைகள், பணத்தைப் புதைத்து வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகவும், இவற்றை தோண்டி எடுக்க சிங்கள வீரர்கள் முயற்சிப்பதால்தான், பொதுமக்களை அனுமதிக்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications