நிலத் தகராறு: உசிலம்பட்டியில் விவசாயி சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
உசிலம்பட்டி: நிலத் தகராறு காரணமாக உசிலம்பட்டியில் விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.கள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி தேவரின் மகன் விஜயன் (45).
விவசாயியான இவருக்கும் பக்கத்து ஊரான பொம்மனம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது.
இந் நிலையில் இன்று தனது வீடு அருகே விஜயன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
நிலத் தகராறு தொடர்பாக இந்த கொலை நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications