ஊழலுக்கான தண்டனை, பணிநீக்கமே!-உச்ச நீதிமன்றம்
டெல்லி: ஊழலுக்கான ஒரே தண்டனை சம்பந்தபட்டவரை பணி நீக்கம் செய்வதுதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் சர்மா என்ற அரசு பஸ் கண்டக்டர், பயணிகளிடம் வசூலித்த டிக்கெட் பணத்தை கையாடல் செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இது கடுமையான தண்டனை என்று கூறி, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுதந்தர் குமார் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்த தீர்ப்பில் நீதிபதிகள், கையாடல் செய்த தொகை எவ்வளவு என்பது பிரச்சினை அல்ல, அதை கையாடல் செய்த கிரிமினல் நோக்கம்தான் பிரச்சினை. குற்றத்தின் தன்மைக்கேற்பவே எப்போதும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், ஊழல், பொதுப் பணத்தை கையாடல் செய்தல் ஆகிய குற்றங்களைச் செய்யும் அரசு ஊழியர்களுக்கான ஒரே தண்டனை, அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்வது மட்டுமே. இதில் இரக்கம் காட்டுவது தேவையற்றது என்றனர்.












Click it and Unblock the Notifications