13 மாவட்டங்களில் 6.7 லட்சம் போலி ரேஷன் கார்டுகள்!
சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் புழக்கத்தில் இருந்த 6.7 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யயப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுமார் 2 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவை தவிர ஏராளமான போலி கார்டுகளும் இருப்பது தெரியவந்ததால் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்தது.
இதில், திருச்சியில் 59,872 ரேஷன் கார்டுகளும், கோவையில் 77,173 கார்டுகளும், திருப்பூரில் 42,367 கார்டுகளும், சென்னையில் 20,860 கார்டுகளும், தர்மபுரியில் 32,128கார்டுகளும், கரூரி் 22,025 கார்டுகளும், நாகப்பட்டிணத்தில் 37, 084 கார்டுகளும், தூத்துக்குடியில் 34,610 கார்டுகளும், வேலூரில் 78,673 கார்டுகளும், சேலத்தில் 94,674கார்டுகளும், கிருஷ்ணகிரியில் 38,263 கார்டுகளும், கடலூரில் 72,337 கார்டுகளும், தேனியில் 21, 353 கார்டுகளும், நாமக்கல்லில் 39, 558 கார்டுகளும் போலியானவை என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த 6.71 லட்சம் போலி ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யயப்பட்டுள்ளன.
மேலும் சுமார் 4.98 லட்சம் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேல் முறையீடு செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது ஆய்வு செய்த பின் ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்த 13 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 2 மாதத்தில் போலி கார்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications