மீண்டும் பொருளாதார வீழ்ச்சி: எதிர்கொள்ளத் தயார் நிலையில் இந்தியா!- ஸ்டிக்ளிட்ஸ்

2001ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் ஸ்டிக்ளிட்ஸ். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
"உலக அளவில் பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் தலையெடுக்கத் துவங்கியுள்ளன. நிச்சயம் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பெரும் பிரச்சனைகளை சர்வதேச நாடுகள் எதிர்கொள்ள வேண்டி வரும்.
குறிப்பாக அமெரிக்காவில் 2010ம் ஆண்டின் இறுதியில் மீண்டும் ஒரு தேக்க நிலை உருவெடுக்கும் சூழல் உள்ளது. இதை அந்த நாடு எந்த அளவு தாக்குப் பிடிக்கப் போகிறது என்பதில் நிறையபேருக்கு சந்தேகம் உள்ளது.
ஆனால், சீனா அப்படியல்ல. அந்த நாடு எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கும் திறனுடைய பொருளாதார கட்டமைப்பைக் கொண்டுள்ளது. சீனா ஒரு பெரிய குமிழ் மீது உட்கார்ந்திருக்கிறது. அது எந்த நேரமும் வெடித்துவிடும் என்றுதான் மேற்கத்திய பொருளாதாரவாதிகள் சிலர் கூறிவருகிறார்கள். அது முழுக்க தவறானது.
சீனா ஒரு குமிழ் மீது அமர்ந்திருக்கவில்லை. சரியான நிலையில் வசதியாக அமர்ந்துள்ளது அந்த நாடு. எத்தகைய நெருக்கடியையும் அவர்களால் எதிர்கொள்ள முடியும்.
அந் நாட்டு ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். அமெரிக்காவின் தவறுகளைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக நிதி அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் வாஷிங்டனை விட மேம்பட்ட நிலையில் உள்ளனர். வங்கி மற்றும் நிதித்துறை பெய்ஜிங்கின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த இரண்டாவது தேக்கம் ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. காரணம், இந்தியாவின் ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கைகளை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் சிறப்பாக உள்ளது.
பொருளாதார தேக்கத்தின் முதல் கட்டத்தை வேறு எந்த நாட்டையும் விட சிறப்பாக சமாளித்துள்ள இந்தியாவுக்கு இந்த இரண்டாவது தேக்கம் பெரிய சவாலாக இருக்காது.
என்னைப் பொறுத்தவரை அமெரிக்காவின் நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கியைப்போல செயல்பட வேண்டும் என்றுதான் சொல்வேன்...என்று கூறியுள்ளார் ஜோஸப் ஸ்டிக்ளிட்ஸ்.
இன்னொரு பொருளாதார வீழ்ச்சியா.. ஐயோ!!
-
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications