மீண்டும் பொருளாதார வீழ்ச்சி: எதிர்கொள்ளத் தயார் நிலையில் இந்தியா!- ஸ்டிக்ளிட்ஸ்

2001ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் ஸ்டிக்ளிட்ஸ். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
"உலக அளவில் பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் தலையெடுக்கத் துவங்கியுள்ளன. நிச்சயம் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பெரும் பிரச்சனைகளை சர்வதேச நாடுகள் எதிர்கொள்ள வேண்டி வரும்.
குறிப்பாக அமெரிக்காவில் 2010ம் ஆண்டின் இறுதியில் மீண்டும் ஒரு தேக்க நிலை உருவெடுக்கும் சூழல் உள்ளது. இதை அந்த நாடு எந்த அளவு தாக்குப் பிடிக்கப் போகிறது என்பதில் நிறையபேருக்கு சந்தேகம் உள்ளது.
ஆனால், சீனா அப்படியல்ல. அந்த நாடு எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கும் திறனுடைய பொருளாதார கட்டமைப்பைக் கொண்டுள்ளது. சீனா ஒரு பெரிய குமிழ் மீது உட்கார்ந்திருக்கிறது. அது எந்த நேரமும் வெடித்துவிடும் என்றுதான் மேற்கத்திய பொருளாதாரவாதிகள் சிலர் கூறிவருகிறார்கள். அது முழுக்க தவறானது.
சீனா ஒரு குமிழ் மீது அமர்ந்திருக்கவில்லை. சரியான நிலையில் வசதியாக அமர்ந்துள்ளது அந்த நாடு. எத்தகைய நெருக்கடியையும் அவர்களால் எதிர்கொள்ள முடியும்.
அந் நாட்டு ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். அமெரிக்காவின் தவறுகளைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக நிதி அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் வாஷிங்டனை விட மேம்பட்ட நிலையில் உள்ளனர். வங்கி மற்றும் நிதித்துறை பெய்ஜிங்கின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த இரண்டாவது தேக்கம் ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. காரணம், இந்தியாவின் ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கைகளை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் சிறப்பாக உள்ளது.
பொருளாதார தேக்கத்தின் முதல் கட்டத்தை வேறு எந்த நாட்டையும் விட சிறப்பாக சமாளித்துள்ள இந்தியாவுக்கு இந்த இரண்டாவது தேக்கம் பெரிய சவாலாக இருக்காது.
என்னைப் பொறுத்தவரை அமெரிக்காவின் நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கியைப்போல செயல்பட வேண்டும் என்றுதான் சொல்வேன்...என்று கூறியுள்ளார் ஜோஸப் ஸ்டிக்ளிட்ஸ்.
இன்னொரு பொருளாதார வீழ்ச்சியா.. ஐயோ!!
-
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
எங்களின் இறை தூதுவர் வருகிறார்.. ஓப்பனாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. ஓ இதுக்குத்தான் அட்டாக்கா! -
ஈரான் - அமெரிக்கா போர்.. நீங்கள் சாப்பிடும் மீன் உணவுகளை பாதிக்க போகுது! எப்படி தெரியுமா? -
வீட்டிலிருந்தே வேலை.. IT ஊழியர்களுக்கு உடனே WFH! வல்லுனர் பரிந்துரை! பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி -
இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்! கதிகலங்க வைக்கும் நேரடி அனுபவம் -
ஒரே வாரத்தில்.. 28% க்கும் மேல் வளர்ச்சி அடைந்த அதானி டோட்டல் கேஸ்.. சர்ரென உயர்வு! பின்னணி என்ன? -
சமையல் எரிவாயு விலை உயர்வு.. LPG உயர்விற்கு பின் உள்ள உண்மையான காரணம் என்ன? - முழு பின்னணி -
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்.. ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்தில் சிக்கியது எப்படி?












Click it and Unblock the Notifications