லக்னோ சென்னை சென்னை ரயிலின் என்ஜினில் திடீர் தீ
வாரங்கல்: சென்னையிலிருந்து லக்னோ கிளம்பிச் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநில்ம் வாரங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது. இருப்பினும் எந்த அசம்பாவிதமும் இன்றி பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து லக்னோவுக்கு நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இரவு 7 மணியளவில், ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகே எலுகுரு-சிந்தம்பள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, அந்த என்ஜின் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. பிறகு மின்சார என்ஜின் கழற்றப்பட்டு, டீசல் என்ஜின் இணைக்கப்பட்டு பயணம் தொடங்கியது. அதிகமாக சூடேறியதால் என்ஜின் தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அல்லது வேறு காரணமா என்பது குறித்தும் விசாரணைம நடந்து வருகிறது.