வன்னிப் போரில் குறைந்தது 30,000 தமிழர்கள் பலியானார்கள் - இந்திய டாக்டர் பகீர் தகவல்
கொழும்பு: வன்னியில் நடந்த போரின்போது குறைந்தது 30 ஆயிரம் தமிழர்கள் பலியாகியிருப்பதாக அப்போது அங்கு காயம் பட்ட தமிழர்களுக்கு சிகிச்சை அளித்த இந்திய டாக்டர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனது பெயரை குறிப்பிட விரும்பாத அந்த டாக்டர், வன்னிப் பகுதியில் புல்மோட்டை என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்திய மருத்துவ முகாமில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப் போரின் பொழுது நாள் தோறும் நூற்றுக்கணக்கான காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தோம்.
இவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்ட காயமடைந்த தமிழர்களில் 80 சதவீதமானோர் அவரவர் குடும்பங்களில் ஒருவரையேனும் இழந்தவர்களாகவே இருந்தனர்.
எனது கணிப்புப் படி கிட்டத்தட்ட 30 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளதாக ஈழத் தமிழ் இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications