நித்தியானந்தாவை விடுதலை செய்யக் கோரி சிறை முன்பு சீடர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சாமியார் நித்தியானந்தாவை விடுதலை செய்யக் கோரி அவரது சீடர்கள், சாமியார் அடைக்கப்பட்டுள்ள ராம்நகர் மத்திய சிறை முன்பு பேனர் கட்டி உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர்.

நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்தது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா கிட்டத்தட்ட ஒரு மாத தலைமறைவுக்குப் பின்னர் ஹிமாச்சல் பிரதேசத்தில் வைத்து கர்நாடக போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

அவரை தற்போது ராம்நகர் சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர். 40 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் நித்தியானந்தா ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த வழக்கு இன்னும் முடியவில்லை.

இந்த நிலையில் ராம் நகர் சிறைக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் திரண்டு வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து சிறை வாசலில் ஓரமாக உட்கார்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பஜனைப் பாடல்களையும் அவர்கள் பாடினர். அவர்களில் சில வெளிநாட்டினரும் இடம் பெற்றிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+