வங்கதேசப் படகு விபத்தில் 10 குழந்தைகள் உள்பட 12 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் உள்பட 12 பேர் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
டாக்கா நகருக்கு 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கனம்கஞ்ச் என்னும் மாவட்டத்தில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்களில் 10 பேர் குழந்தைகள் 2 பேர் பெண்கள்.
விபத்துக்குள்ளானவர்களில் பலரைக் காணவில்லை. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விதிகளை மதிக்காமல் அதிகமான ஆட்களை படகில் ஏற்றிச் செல்வதே வங்கதேசத்தில் அடிக்கடி படகு விபத்து ஏற்படக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் வங்கதேசத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் நிகழ்ந்த படகு விபத்து ஒன்றில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications