பெண்ணிடம் பாலியல் அக்கிரமம்-டெல்லி போலீஸ்காரர் அட்டகாசம்
டெல்லி: டெல்லியில், திருட்டு விசாரணைக்காக அழைத்து வந்த பெண்ணை அறையில் பூட்டி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு போலீஸ்காரர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாயாபுரி குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் மயூரி. 30 வயதுப் பெண்ணான இவருகுக்கு ராஜு, ரமேஷ் என இரு மகன்கள். இதில், 12 வயதான ராஜு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்த பொருட்களை திருடி விட்டதாக காருக்குரிய பெண் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ராஜுவை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையறிந்து மயூரி காவல் நிலையம் விரைந்து வந்தார். தனது மகன் நிரபராதி என்று கூறி அழுதார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத போலீஸ்காரர்கள், மயூரியையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் ஒரு அறையில் அவரைப் பூட்டினர்.
அப்போது அங்கு வந்த ஒரு போலீஸ்காரர் மயூரியின் அறைக்குள் நுழைந்து விசாரித்தார். பின்னர் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் விட்டு விடுவதாக மிரட்டினார். ஆனால் அதற்கு மயூரி உடன்படவில்லை. இதையடுத்து அவரது உடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி அட்டகாசம் செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கதறி அழுதுள்ளார். இதைப் பார்த்த மற்ற போலீஸ்காரர்கள், காமவெறி பிடித்த அந்தப் போலீஸ்காரரை விலக்கி விட்டு, அந்தப் பெண்ணை விடுவித்தனர்.
விடுபட்ட மயூரி நடந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் தத்வாலிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து இதுதொடர்பாக விசாரணைக்கு ஆணையர் உத்தரவிட்டார். விசாரணையில் தவறு நடந்திருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பெண் காவலர் அம்ரிதா சிங், காவலர்கள் பிரமோத் குமார், சந்தோஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications