For Quick Alerts
For Daily Alerts
Just In
சிம்லாவில் மனைவியுடன் ராஜபக்சே 2 நாள் ஓய்வு
சிம்லா: இந்தியா வந்துள்ள ராஜபக்சே தனது மனைவி ஷிராந்தியுடன் இன்று சிம்லா வந்து சேர்ந்தார். அங்கு 2 நாள் அவர் ஓய்வெடுக்கிறார்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் இருவரும் அனந்தேல் ஹெலிபேடுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை ஹிமாச்சல் பிரதேச அமைச்சர் ராஜீவ் பிந்தால் வரவேற்றார்.
பின்னர் ராஜபக்சே தம்பதியினர் சப்ரா சென்றனர். அங்குள்ள ஹோட்டல் வைல்ட் பிளவர் ஹாலில் 2 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் ராஜபக்சே பேசுகையில், இந்திய, இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, சமூக உறவுகளை மேம்படுத்தும் என்றார்.
Comments
Story first published: Friday, June 11, 2010, 13:12 [IST]