ராஜ்யசபா-தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
சென்னை: திமுகவைச் சேர்ந்த கே. பி. ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு, அதிமுகவைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், கே. வி. ராமலிங்கம், காங்கிரஸைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பிக்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ராஜ்சபாவுக்கு 6 உறுப்பினர்களை தேரந்தெடுக்க வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது.
இதில் கே. பி. ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு, மனோஜ் பாண்டியன், கே. வி. ராமலிங்கம், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தவிர, சுயேச்சைகளாக பத்மராஜன், மனிதன், வேல்முருகன், நாகூர் மீரான் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் இவர்களது மனுக்கள் எந்த எம்எல்ஏவும் வழி மொழியாததால் அவரை தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து 6 பேரும் போட்டியின்றி ராஜ்யசபாவுக்குத் தேரந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி செல்வராஜ் அறிவித்தார்.
பழைய உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் 29ம் தேதி வரை இருப்பதால் இவர்கள் அதற்கு பிறகு தான் பதவி ஏற்பார்கள்.












Click it and Unblock the Notifications