ரயில் பாதை தகர்ப்பு ஒரு தீவிரவாத செயல் - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார். அரை மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது.
பின்ன்ர் வெளியே வந்த அவரிடம்,
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என்று மத்திய அரசுக்கு தெரியாதா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு சிதம்பரம் பதிலளிக்கையில்,இது பற்றி அதிகாரபூர்வமாக மத்திய அரசுக்கு எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார்.
விழுப்புரத்தில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளதே? இதில் யாரும் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, விழுப்புரத்தில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்கதக்கது. இது ஒரு தீவிரவாத, பயங்கரவாத செயலுக்கான முயற்சி என்பதால் இதை வன்மையாகவே கண்டிக்கிறோம்.
சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒரு சிலரை கைது செய்திருப்பதாக கூறி உள்ளனர். தமிழக போலீசும், உளவுத்துறையும் இணைந்து செயல்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களைக் குறி வைத்து நடந்த தாக்குதலா இது என்ற கேள்விக்கு,
என்னை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூற முடியாது. நான் டெல்லியில் இருக்கும்போதே மலைக்கோட்டை ரயிலில் செல்லும் முடிவை கேன்சல் செய்துவிட்டேன். இது என் உயிர் பிரச்சினை மட்டுமல்ல, எல்லா உயிர்களும் ஒன்றுதான். 2 ஆயிரம், 3 ஆயிரம் மக்கள் உயிர் சம்பந்தப்பட்டது என்றார்.
முதல்வருடன் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
ராஜபக்சே இந்தியா வந்தபோது ஏற்பட்ட இந்தியா- இலங்கை அரசின் ஒப்பந்தம் பற்றி ஆலோசித்தோம். இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் ரூ.1000 கோடி மதிப்பில் வங்கிகள் மூலம் கட்டிக்கொடுக்க இந்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
இலங்கை கணக்குப்படி 52 ஆயிரம் பேர் முகாம்களில் இருப்பதாக கூறுகிறார்கள். நம் கணக்குப்படி 57 ஆயிரம் பேர் முகாம்களில் இருப்பதாக அறிகிறோம். அவர்களை சொந்த இடங்களுக்கு விரைவில் குடி அமர்த்த இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி கூறி உள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் கட்டுவது, விமான நிலையம் புதிதாக உருவாக்குவது என பல்வேறு அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
6 மாதத்தில் இவைகளை முடிப்பதாக இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications