கேரளாவில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்-30 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேராளவில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருவனந்தபுரத்தில் 16 பேரும், கொல்லத்தில் 7 பேரும், கண்ணூரில் 3 பேரும், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய நகரங்களில் தலா ஒருவரும் இதுவரை 30 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் தவிர சில இடங்களில் வேறு வகையான காய்ச்சலும் காணப்படுகிறது.
அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவையில்லை என டாக்டர்கள் கூறுகிறார்கள். கேரளாவில் பன்றி காய்ச்சலுக்கு கடந்த ஆண்டு 46 பேரும் இந்தாண்டு ஒருவரும் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications