ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வு- சென்செக்ஸும் கிடுகிடு உயர்வு
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 172 புள்ளிகள் உயர்ந்தது. பல முக்கிய நிறுவனங்களின் பங்குகளும் இன்று நல்ல உயர்வைக் கண்டன.
நேற்று 142.87 புள்ளி உயர்வுடன் முடிவடைந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே 172.71 புள்ளிகள் உயர்ந்து 17,237.66 ஆக இருந்தது. முதல் ஐந்து நிமிடத்திலேயே இந்த உயர்வு காணப்பட்டது.
தேசியப் பங்குச் சந்தையான நிப்டியும் 45.55 புள்ளிகள் உயர்ந்து 5164.90 ஆக காணப்பட்டது.
இன்றைய முக்கிய அம்சமே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்ததுதான். கடந்த வாரம் 3ஜி பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையை வென்ற ரிலையன்ஸ், அடுத்து மின் திட்டத்தில் பெருமளவில் முதலீடு செய்யப் போவதால் ரிலையன்ஸ் நிறுவனம் இன்று பங்குச்சந்தையில் ஏற்றம் கண்டது.
மேலும் ஆசிய பங்குச்சந்தையிலும் இன்று நல்ல உயர்வு காணப்பட்டதும் பாம்பே பங்குச் சந்தையில் சென்செக்ஸ் உயர்வுக்கு முக்கிய காரணம்.