வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்திருத்த மசோதா மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றது.
இம் மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் வைக்கப்பட்டு அதன் ஒப்புதல் பெற்ற பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாகும்.
இந்த சட்ட மசோதா மூலம் வாக்குரிமை கோரி வரும் லட்சக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்குரிமை பெறுவார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து வெளியுறவு அமைச்சகத்திற்கு கோரிக்கை மேல் கோரிக்கையாக வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்,
இந்தியாவில் வாக்களிக்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியிருந்தார். அவ்வாறே அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இந்திய ஜனநாயகம் மென்மேலும் வலுவடையும் என்றார்.
தற்போதுள்ள சட்டப்படி ஒருவர் வெளிநாட்டிற்கு சென்று 6 மாதங்களுக்கு மேல் தங்கி விட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படும்.
ஆனால் புதிய சட்டப்படி, இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் குடியேறி வசித்தாலும், அவர்கள் வாக்களிக்கலாம். தாங்கள் சார்ந்த தொகுதிகளுக்கு நேரில் வந்து அவர்கள் வாக்களிக்க அனுமதி கிடைக்கும்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications