தமிழில் பெயர் மாற்றம்: 2 மாத அவகாசம் கோரும் வெள்ளையன்!
சென்னை: அனைத்து கடைகளின் பெயர்களும் தமிழில் மாற்ற வணிகர் சங்கம் ஆதரவு அளிப்பதாகவும், அதற்கு மேலும் 2 மாத கால அவகாசம் வேண்டும் என வணிகர் சங்க பேரவைத் தலைவர் த வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் விடுத்துள்ள அறிக்கை:
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வெற்றியடைய வணிகர்கள் அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்போம் என்பதுதான் எமது 27-வது வணிகர் தின மாநாட்டின் முதல் தீர்மானம்.
கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் எனறு சென்னை மாநகராட்சி அறிவித்தபோது அதை ஆதரித்து உடனடியாக செயலில் இறங்கியது எங்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைதான்.
வணிகர்களும் மனமுவந்து பெயர் மாற்றம் செய்து வருகின்றனர். பெயர் மாற்றம் செய்ய ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும் நடைமுறையில் உள்ள சில சிரமங்களாலும் சில வணிகர்களால் குறித்த காலக்கெடுவிற்குள் பெயர் மாற்றம் செய்ய இயலாத நிலை இருக்கிறது. எனவேதான் இன்னமும் இரண்டு மாதங்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்று எமது பேரவை கேட்டுக்கொண்டது.
ஆனால், சென்னை மாநகராட்சி 20 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தது. இது வணிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் சென்னை, திருச்சி, கோவை மாநகராட்சிகளிலும், பெரிய நகரங்களிலும் பெயர் மாற்றம் செய்யாத வணிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்தும், பெயர்ப் பலகைகளை அகற்றியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது வணிகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து பிறமொழி வணிகப் பெயர்களுக்கும் சரியான தூய தமிழ்ப் பெயர் பட்டியல் அரசே வெளியிட வேண்டுகிறோம். போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும். பெயர் மாற்றம் செய்யும் வணிகர்களுக்கு தொழில் உரிமக் கட்டணம் தொழில் வரி ஆகியவற்றில் 50 சதவீதம் சலுகை, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக வணிகர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை கைவிட உத்தரவிட வேண்டும்.
நுகர்ப்பொருட்களின் உறைகளில் அதன் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தமிழில் இடம் பெற வேண்டும் என்கிற எமது பேரவையின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஆணை பிறப்பிக்க வேண்டும். கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இடம் பெற்றால்தான் 'இது தமிழ்நாடு' என்று உலகத் தமிழர்கள் உணர்வார்கள் என்கிற கருத்து வணிகர்களுக்கு சிறப்பை ஏற்படுத்தும்.
இதை உணர்ந்து பெருமிதம் கொண்டு பொருட்செலவை ஒரு பொருட்டாக கருதாமல் தமிழகமெங்கும் உள்ள வணிகர்கள் தங்களை யாரும் வலியுறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல் தாங்களாகவே மனமுவந்து பெயர்ப் பலகைகளில் தமிழில் எழுதி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்க்க வேண்டும் என்று வணிகர்களுக்கு எடுத்துச் சொல்லி தாங்கள் தலைமையில் நடைபெற விருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறக்க வணிகர் சங்க பேரவை உதவியாக இருக்கும்..."
இவ்வாறு வெள்ளையன் கூறி உள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications