மும்பை தாக்குதல் சம்பவம்-ஹெட்லிக்கு அடுத்த தண்டனை

ஹெட்லியுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணா மீதான விசாரணை முடிவடைந்த பின்னரே ஹெட்லிக்கும் தண்டனை கொடுக்கப்படும் என ஹெட்லியின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெட்லியின் வக்கீல் ஜான் தீஸ் கூறுகையில், அடுத்த ஆண்டுக்கு முன்னதாக ஹெட்லிக்கு தண்டனை அளிக்கப்பட வாய்ப்பில்லை. ராணா விசாரணை முடிவடைந்த பின்னர் ஹெட்லிக்கும் தண்டனை வழங்கப்படும்.
இந்த வழக்கில் தொடர்புடைய ராணா, அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த இலியாஸ் காஷ்மீரி, பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் அப்துல் ரஹ்மான் ஹசிம் சையத் ஆகியோர் மீதான விசாரணையின்போது தேவையான ஒத்துழைப்பை ஹெட்லி அளிப்பார் என்றார்.
காஷ்மீரியும், சையத்தும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
வருகிற நவம்பர் 1ம் தேதிதான் ராணா மீதான விசாரணை முடிவடையும் எனத் தெரிகிறது. ஹெட்லி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அப்ரூவராகி விட்ட நிலையில் ராணா தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இருவரும் தற்போது சிகாகோவில் உள்ள பெருநகர சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் ஹெட்லியிடம் இந்திய விசாரணையாளர் குழு விசாரணை நடத்தியது. ஒரு வாரம் இந்த விசாரணை நடந்தது.












Click it and Unblock the Notifications