லஞ்சம் தர மறுத்த முதியவரை தாக்கி காயப்படுத்திய சேலம் கவுன்சிலர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

Cable Sundaram
சேலம்: குடிநீர் இணைப்பு பெற லஞ்சம் தர மறுத்த முதியவரை சற்றும் இரக்கமில்லாமல் தாக்கி காயப்படுத்தியுள்ளார் சேலம் மாநகராட்சி கவுன்சிலர் சுந்தரம் என்கிற கேபிள் சுந்தரம். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியின் 29வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சுந்தரம் என்கிற கேபிள் சுந்தரம். இவரை தியாகராஜன் என்ற முதியவர் குடிநீர் இணைப்பு பெறுவற்காக அணுகியுள்ளார்.

அப்போது முதியவரிடம் ரூ. 15,000 கொடுத்தால் இணைப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ளார் சுந்தரம். ஆனால் லஞ்சம் எல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளார் முதியவர் தியாகராஜன்.

இதனால் ஆத்திரமடைந்த கேபிள் சுந்தரம், முதியவர் தியாகராஜனை தாக்கி காயப்படுத்தி விட்டார்.

அதிர்ச்சி அடைந்த முதியவர் தியாகராஜன் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் கேபிள் சுந்தரம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வேலியே பயிரை மேய்வது போல யாருக்காக சேவையாற்ற தேர்ந்தெடுத்தார்களோ, அந்த மக்களிடமே லஞ்சம் கேட்டு, அதை தர மறுத்ததற்காக முதியவர் என்றும் பாராமல் தாக்கி காயப்படுத்திய இந்த கவுன்சிலரை எந்தக் கணக்கில் சேர்ப்பது...?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+