நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்

தமிழ்நாட்டில் தற்போது 17 இடங்களில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. காற்றாலை மூலம் இந்தியாவின் மின்உற்பத்தியில் 3 சதவீதம் கிடைக்கிறது.
குமரி-நெல்லை மாவட்ட எல்லையில் சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. ஆசியாவிலேயே அதிக காற்று வீசம் பகுதி முந்தலை ஓட்டிய இப்பகுதிதான் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் இருந்து காற்றாலை மூலம் கடந்தாண்டு 4200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆண்டிற்கு 9 மாதங்கள் இப்பகுதியில் தொடர்ந்து காற்று வீசுவதால் மின்உற்பத்தி சீராக இருக்கும்.
இதிலும் குறிப்பாக ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரைதான் காற்றாலை மின்உற்பத்தி சீசன் காலமாகும். தற்போது இந்த சீசன் தொடங்கி விட்டதால் வினாடிக்கு 20 முதல் 25 மீட்டர் வேகத்தில் இந்த பகுதியில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.
கடந்த மே 15ம் தேதியில் இருந்து காற்றாலை மின் உற்பத்தி தொடங்கியது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் காற்றின் வேகம் எதிர்பாரவிதமாக குறைந்தது. 3 நாட்களில் மீண்டும் காற்று வீச தொடங்கியது.
காற்றாலையில் மின் உற்பத்தி செய்ய வினாடிக்கு 3.5 மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலே போதுமானது. தற்போது இந்த பகுதியில் வினாடிக்கு 15 முதல் 25 மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் காற்றாலைகளில் மின்உற்பத்தி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தாண்டு காற்றாலை மின்உற்பத்தி 4500 மெகாவாட்டை தாண்டும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications