For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் மழையால் நீலகிரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விறு விறு உயர்வு

Google Oneindia Tamil News

ஊட்டி: தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கனமழையால் மசினகுடி அருகே உள்ள மாயார், சீகூர், ஆனைக்கட்டி, சிறியூர் ஆகிய பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, பார்சன்ஸ்வோ, காமராஜர் சாகர் அணை உள்ளிட்ட 11 அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மழையின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் உள்ள மலர்கள் அழுகி விட்டன. மழையால் தற்போது பச்சைப் பட்டு விரித்தது போல் பசுமையாக இருக்கும் முதுமலை வனப்பகுதிக்கு வன விலங்குகள் திரும்பி உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X