செம்மொழி மாநாடு-பாதுகாப்புப் பணிக்கு 60 வெடிகுண்டு நிபுணர்கள் கோவை வருகை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து கமிஷனர் சைலேந்திர பாபு அளித்துள்ள பேட்டியில், கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல்தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதிலுமிருந்து 60 வெடிகுண்டு நிபுணர்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நகரின் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்வார்கள்.
இவர்கள தவிர 20 மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கோவை விமான நிலையம், ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications