சென்னையில் சிகிச்சை பெற பார்வதி அம்மாளை அழைத்து வர திருமா முயற்சி?
மதுரை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வர விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ரகசியமான முறையில் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள முசிறியில் வந்து சிகிச்சை பெற்றதால் குணமடைந்தார். பிறகு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்தில் இலங்கை சென்று பிரபாகரனுடன் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே இறுதிக் கட்ட போரின் போது இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் ஈழத் தமிழர்களுடன் பார்வதி அம்மாளும், அவரது கணவர் வேலுப்பிள்ளையும் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார். அதன் பிறகு பார்வதி அம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், கனடாவில் உள்ள தனது மகள் வீட்டில் சிகிச்சை பெற பார்வதி அம்மாள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
எனவே மீண்டும் தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்பினார். இதற்காக மலேசியாவிலிருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக பார்வதி அம்மாள் வந்தார். ஆனால் சென்னை விமான நிலையத்தில் இறங்கக் கூட அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர் .
இந்த நிலையில், தமிழக அரசின் முயற்சியால் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற நிபந்தனைகள் விதிப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இதனை விரும்பாத பார்வதி அம்மாள் நிபந்தனையை ஏற்காமல் இலங்கையில் உள்ள தனது சொந்தவூரான வல்வெட்டித் துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தனு நிபந்தனைகளை தளர்த்தி சிகிச்சைக்கு அனுமதியளித்து.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கலாம். நண்பர்கள், உறவினர்கள் சந்திக்கலாம். ஆனால் அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சந்திக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் அதைப் பரிசீலிக்கும் மன நிலையில் பார்வதி அம்மாள் இல்லை என்று அவரது உறவினரும், முன்னாள் எம்.பியுமான சிவாஜிலிங்கம் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் பார்வதி அம்மாள் உடல் நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அறிந்த, ஈழத்தமிழர்களும், அவரது நெருங்கிய உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்து அவரை பார்த்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் விடுதலை சிறுதைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பார்வதி அம்மாளை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க தீவிர ஏற்பாடு செய்து வருகிறார்.
பார்வதி அம்மாளை கவணித்து வரும் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் மற்றும் கனடாவில் இருந்துவரும் அவரது மகளையும் திருமாவளவன் எம்.பி தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
அவர்களின் இசைவு கிடைத்தப் பின்பு திருமாவளவன் யாழ்ப்பாணம் மருத்துவமனைச் சென்று பார்வதி அம்மாளை அழைத்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பின்னரே பார்வதி அம்மாள் அழைத்து வரப்படுவார் என விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications