For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவி்ன் கடப்பா மாவட்டத்துக்கு ராஜசேகர ரெட்டி பெயர்

Google Oneindia Tamil News

YSR
ஹைதராபாத்: ஆந்திராவின் கடப்பா மாவட்டத்துக்கு முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரை சூட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரான ரெட்டி கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

ஆந்திராவில் மிகப் பிரபலமான முதல்வராக இருந்த அவரது பெயருக்கும் குடும்பத்துக்கும் பெரும் செல்வாக்கு உள்ளது.

முதல்வர் பதவியைப் பிடிக்க அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக முயன்று வருகிறார். இதையடுத்து ராஜசேகர ரெட்டிக்கு மரியாதை செய்யும் வகையில் எதையாவது செய்ய வேண்டிய நிலைக்கு அந்த மாநில முதல்வர் ரோசய்யா தள்ளப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் பிறந்த கடப்பா மாவட்டத்துக்கு ராஜசேகர ரெட்டி பெயரைச் சூட்டுவது என காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. ஆனால் ராஜசேகர ரெட்டி என்ற பெயர் நீளமாக இருப்பதால் அந்தப் பெயரைச் சூட்டுவதில் தயக்கம் இருந்தது.

தொண்டர்களால் அவர் ஒய்.எஸ்.ஆர். என்று அழைக்கப்பட்டதால் மாவட்டத்துக்கு அந்தப் பெயரையே சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில செய்தி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கீதா ரெட்டி கூறுகையி்ல், அமைச்சரவைக் கூட்டத்தில் கடப்பா மாவட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் என்ற பெயரைச் சூட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

ஒய்எஸ்ஆரின் பிறந்த நாள் விழாவை ஜூலை 8ல் அரசு பிரமாண்டமாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X