அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் கொட்டப்பட்ட சிமென்ட் கட்டி-ரயிலைக் கவிழ்க்க சதியா?
சென்னை: அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் கொட்டப்பட்ட சிமென்ட் கலவையால் ரயிலைக் கவிழ்க்க நடந்த சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரக்கோணத்திலிருந்து இன்று அதிகாலையில் ஒரு ரயில் என்ஜின் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த என்ஜின், பட்டாபிராம் ரயில் நிலையத்தை கடந்தபோது திடீரென எதுவோ குறுக்கிட்டது போல உணர்ந்தார் என்ஜின் டிரைவர்.
இருளாக இருந்ததால் அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து பட்டாபிராம் ரயில் நிலைய மேலாளருக்கு அவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார், மோப்ப நாய் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து சோதனையிட்டனர்.
அப்போது தண்டவாளத்தில் சிமென்ட் கட்டி கிடந்ததைப் பார்த்தனர். அதன் மீதுதான் அந்த என்ஜின் ஏறி இறங்கியுள்ளது. இதை யார் இங்கு கொண்டு வந்து கொட்டியது என்பது தெரியவில்லை. மீதமான சிமென்ட் கலவையை வீடுகள், கட்டடங்கள் கட்டும் இடத்தில் போட்டு வைப்பது போல தண்டவாளத்தில் கொண்டு வந்து கட்டியுள்ளனர்.
இந்த சிமென்ட் கட்டி பெரிதாக இல்லை. மேலும், அது நன்கு இறுகாமலும் இருந்ததால் என்ஜின் தப்பியது. பெரிதாக இருந்து, இறுகி கான்க்ரீட் ஆகியிருந்தால் என்ஜின் கவிழ்ந்திருக்கும்.
எனவே இது சதிச் செயலா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
-
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது!











Click it and Unblock the Notifications