For Daily Alerts
Just In
சென்னை-விஜிபி கோல்டன் பீச்சில் ராட்டினம் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் விஜிபி கோல்டன் பீச் பொழுது போக்குப் பூங்கா உள்ளது. இங்கு 15 நாட்களுக்கு முன்பு புதிதாக ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டது.
இந்த ராட்டினம் இன்று செயல்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விழுந்தது. இதில் 3 பேர் சிக்கி படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவர்களை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரிக்க போலீஸார் விரைந்துள்ளனர். அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Story first published: Monday, June 21, 2010, 13:14 [IST]