பட்டியல் இனத்தில் சேர்க்கக் கோரி தலித் கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம்
நெல்லை: தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி டெல்லியில் வரும் ஜூலை 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடக்கிறது.
இதுகுறித்து இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கத் தலைவர் தனராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,
பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 21-ம் தேதி டெல்லியில் தேசிய அளவிலான கூட்டமைப்புடன் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடக்கிறது.
இது குறித்த ஆலோசனை கூட்டம் குவளைகண்ணியில் நாளை நடக்கிறது. இதில் 7 தென்மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தலித் கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஏமாற்றினால் வரும் தேர்தலில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications