மனைவியை ஏமாற்றிவிட்டு 2வது திருமணம்-முதலிரவில் மணமகன் கைது
சென்னை: முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்த மணமகன் முதலிரவுக்கு தயாரானபோது கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி அருகே பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த ஆசிரியர் குமரேசனுக்கு (32) நான்கு ஆண்டுகளுக்கு முன்பே புவனேஸ்வரி என்ற ஆசிரியையும் திருமணம் ஆகி 3 வயதில் மகன் இருக்கிறான்.
இந் நிலையில், தனது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த நிர்மலா (27) என்ற பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
மணமகள் நிர்மலா வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்தன.
இந் நிலையில் இந்தத் திருமணம் குறித்து அறிந்த முதல் மனைவி புவனேஸ்வரி, தன்னை ஏமாற்றிவிட்டு 2வது திருமணம் செய்து விட்டதாக குமரேசன் மீது மைலாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார்.
சேலத்தில் வசித்து வரும் அவர் குமரேசன் இரண்டாவது திருமணம் செய்துள்ளதை அறிந்து சென்னைக்கு விரைந்து வந்து இந்த புகாரை கொடுத்தார்.
இதையடுத்து குமரேசனை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.
இதைப் பார்த்து மணப்பெண் நிர்மலா, என்னை ஏமாற்றி வாழ்க்கையையே கெடுத்துவிட்டாயே என்று குமரேசனை திட்டியபடி கதறி அழுது மயங்கி விழுந்தார். அவருக்கு சிகிசசை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications