ஒரு மாணவர் கூட சேராத திருவள்ளுவர் பல்கலைக்கழகம்-தா.பாண்டியன் புகார்

Subscribe to Oneindia Tamil

தேனி: திருவள்ளுவர் பெயரால் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. மொழி பேசும் மக்களின் வளர்ச்சியை பொறுத்தே மொழி வளர்ச்சி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில்,

ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நிலமீட்சி இயக்கம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் திருடப்படுகிறது. இதில் அமைச்சர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது.

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் அனுமதி வழங்கப்பட்ட குவாரியால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

மேகமலை வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை வெளியேற்றக் கூடாது.

மாநில அரசின் பொதுக்கடன் கணக்கு ரூ. 94 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. அந்த அளவுக்கு நிதி நிர்வாகத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

திருவள்ளுவர் பெயரால் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை.

மொழி பேசும் மக்களின் வளர்ச்சியை பொறுத்தே மொழி வளர்ச்சி பெறும்.

தமிழகத்தின் மின் உள்கட்டமைப்பு வசதி குறைவால் தனியார் காற்றாலைகளில் பலமுறை உற்பத்தி நிறுத்தப்படுகிறது.

போபாலில் விஷ வாயு விவகாரத்தில் இறந்த மக்களுக்கு காங்கிரஸ் அரசு மறு தண்டனை வழங்கி உள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+