For Daily Alerts
Just In
அமெரிக்கா விசா பெற மோசடி-தேனிலவுத் தம்பதியாக நடித்தவர்கள் கைது
சென்னை: விசா பெறுவதற்காக தேனிலவுத் தம்பதி போல நடித்த ஜோடியை போலீஸார் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அம்ரித்சிங் (26) என்ற இளைஞரும், சுக்மீர் கவுர் (20) என்ற இளம் பெண்ணும், அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. ஆனால் விசா பெறுவதில் உள்ள சிக்கலைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஒரு நாடகம் போட முடிவு செய்தனர்.
அதாவது புதுமணத் தம்பதிகள் போல ஆவணங்களைத் தயாரித்து விசா பெற்று அமெரிக்காவுக்குப் போக திட்டமிட்டனர்.
அதன்படி சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். அதேபோல அவர்களுக்கு உதவிய பஞ்சாபைச் சேர்ந்த நரேஷ் கவுர் மற்றும் தபேர் சிங் ஆகியோரும் கைதானார்கள்.
Comments
Story first published: Saturday, June 26, 2010, 12:59 [IST]