பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
பெட்ரோல், டீசல், மண்எண்ணை, சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு உயர்த்தியதால், ஏற்கனவே நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் வலைவாசி ஏற்றம் மேலும் கடுமையாக அதிகரித்து உள்ளது.
அனைத்தப் பண்டங்களின் விலையும் மிகவும் உயர்ந்து உள்ளதால், நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அன்றாடங்காய்ச்சிகளும், மாத வருவாயை நம்பி வாழும் மக்களும், தாங்க முடியாத அல்லலுக்கு ஆட்பட்டு உள்ளனர். சமையல் எரி வாயு விலையைக் கூட்டியதால், குடும்பச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தாய்மார்கள் துயர்படுகின்றனர்.
மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்த வருகின்ற மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, விலைவாசி உயர்வைக் கண்டித்து ம.தி. மு.க. சார்பில் ஜூலை 1-ந்தேதி காலை 11 மணிக்கு பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை துறைமுகம் எதிரில் உள்ள மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.