எலுமிச்சை விலை சரிவு:கவலையில் விவசாயிகள்
புளியங்குடி: எலுமிச்சை விலை சரிவால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தையும், கஷ்டத்தையும் சந்தித்துள்ளனர்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையாலும், குற்றால சீசன் துவங்கியுள்ளதாலும், புளியங்குடியில் எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆயிரம் பழங்கள் ரூ.400க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் எலுமிச்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. புளியங்குடியில் எலுமிச்சைக்கென்று பிரத்யேகமாக மார்க்கெட் உள்ளது.
புளியங்குடி மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் எலுமிச்சம் பழங்கள் இங்குள்ள 29 கடைகள் மூலம் ஏலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்ரலில் ஆயிரம் பழங்கள் ரூ.3000 வரை விற்பனையானது.
அதன்பிறகு ரூ.2000க்கு குறையாமல் விற்று வந்த எலுமிச்சம் பழங்கள் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், குற்றால சீசன் தொடங்கியுள்ளதாலும் கடந்த வாரம் ஆயிரம் பழங்கள் ரூ.1500 வரை விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 27-ம் தேதி கேரளாவில் பந்த் நடந்தது. இதனால் கேரளாவுக்கு செல்லும் எலுமிச்சம் பழங்கள் தடைப்பட்டு எலுமிச்சை விலையில் பெரும் சரிவு ஏற்பட்டது. நேற்று புளியங்குடி மார்க்கெட்டுக்கு வந்த எலுமிச்சம் பழங்கள் அதிகபட்சமாக ஆயிரம் பழங்கள் ரூ.400க்குதான் விலை போனது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications