டீசல் உயர்வு எதிரொலி-ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது- லாரி வாடகை 12% உயந்தது

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கூறுகையில், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்களுக்கு அதிக வரி விதிப்பால் ஏற்கனவே நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
கடந்த முறை டீசல் விலையை உயர்த்தியபோது ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந் நிலையில் மத்திய அரசு மீண்டும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
பஸ்களின் அனைத்து உதிரி பாகங்களும் விலை உயர்ந்துள்ள நிலையில், டீசல் விலையையும் உயர்த்தியுள்ளதால் பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை.
எனவே சாதாரண ஆம்னி பஸ்களில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.10ம், ஏ.சி. பஸ்களில் டிக்கெட்டுக்கு ரூ.20ம், வால்வோ பஸ்களில் டிக்கெட்டுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரையும் உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
லாரி வாடகையும் உயர்ந்தது:
அதே போல லாரி வாடகை 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
டிரங்க் ரோடுகளில் செல்லும் நீண்ட தூரம் பயணிக்கும் லாரிகளின் வாடகை கடந்த சனிக்கிழமை முதல் 12 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications