ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்!

கனகபுரா ரோட்டில் உள்ள இந்த ஆசிரமத்தில் கடந்த மாதம் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆசிரமத்தில் ரவிசங்கர் பேசிவிட்டு காரில் ஏறிச் சென்ற பி்ன்னர் வானிலிருந்து வந்த குண்டு அங்கு நின்றிருந்த வினய் என்பரின் தொடையை உரசிச் சென்றது.
இது தனக்கு வைக்கப்பட்ட குறி என்று ரவிசங்கர் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரவிசங்கருக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டது.
ஆனால், இது ஆசிரமத்தில் நடக்கும் கோஷ்டிப் பூசலால் நடந்த சம்பவமாக இருக்கலாம் என்று கூறி போலீசார் பிரச்சனையை மேலும் குழப்பினர்.
இந் நிலையில் ஆசிரமத்தை ஒட்டியுள்ள பண்ணை வீட்டைச் சேர்ந்தவர் நாய்களை விரட்ட வானை நோக்கி சுட்டபோது, குண்டு தவறுதலாக ஆசிரமத்துக்குள் பாய்ந்து விவரம் பி்ன்னர் தெரியவந்தது. இருந்தாலும் ரவிசங்கருக்கு பாதுகாப்பு தொடர்கிறது.
இந் நிலையில் இப்போது ஆசிரமத்தின் ரகசியங்களை வெளியிடுவேன் என்ற எச்சரிக்கையோடு ரூ. 42 கோடி கேட்டு ரவிசங்கருக்கு மிரட்டல் வர ஆரம்பித்துள்ளது.
நேற்று ஆசிரமத்தின் செயலாளர் கிஷோர் பிரசாத், துணை மேலாளர் ரவி கெளடா ஆகியோருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய ஒரு நபர் ரூ. 42 கோடி கேட்டு மிரட்டினார்.
இரண்டு தொலைபேசிகளில் இருந்து பேசியுள்ள அவர் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் பேசியுள்ளார். பணம் தராவிட்டால் ஆசிரமத்தில் நடக்கும் சில விவகாரங்களை அம்பலப்படுத்துவேன், ரகசியங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
கடந்த 2 மாதங்களாகவே இப்படி மிரட்டல் வருவதாகவும், ஆனால் இப்போது தான் ஆசிரமம் தலகட்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
புகாரை பதிவு செய்ய ஆசிரமம் ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது என்று தெரியவில்லை.
மத்திய அரசிடம் நீண்ட காலமாகவே தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு வருகிறார் ரவிசங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications